Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

Prasanth Karthick
புதன், 22 ஜனவரி 2025 (10:19 IST)

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ளார்.

 

 

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022ம் ஆண்டில் போர் தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டது உக்ரைன்.

 

தற்போது அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அதுபோல உக்ரைன் - ரஷ்யா போரிலும் ட்ரம்ப் அமைதியை நிலைநாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தான் அதிபராக வெற்றிபெற்ற போதே இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் செய்து பேசியிருந்தார் ட்ரம்ப்.

 

உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி பேசிய அவர் “நாங்கள் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறோம். புதினிடமும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம்” என்று கூறியுள்ளார்.

 

இதனால் விரைவில் இரு நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments