Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து: ரஷ்யாவின் வெற்றி வெற்றிதானா... WHO சொல்வது என்ன??

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (09:54 IST)
ரஷ்யா கொரோனவுக்கு மருந்து கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது குறித்து WHO தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

 
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பல  ஈடுப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை மனிதர்கள் மீது செலுத்தி வெற்றியும் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 
 
மேலும், மனிதர்களிடம் செலுத்தி ஆராயப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது ரஷ்யா. இதனிடையே உலக சுகாகார நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. 
 
அதாவது, மிக அதிகளவு நபர்களிடம் சோதிக்கப்படும் Phase 3 ட்ரையலுக்கு பிறகே, தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான முடிவு கிடைக்கும் என்று உலக சுகாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments