Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் ஒரு வினாடிக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்கள் தெரியுமா...?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (16:53 IST)
நம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக ஒர் ஆய்வுமுடிவு சொல்கிறது. தற்போது உலக அளவில் ஒவ்வொரு செகண்டுக்கும் ஒரு மனிதர் சாலை விபத்தில் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துகளில் இளைஞர்களே அதிக அளவு விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும்  அவர்களில்  5 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களே அதிகம் எனவும் பகிரங்கமாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
உலக வல்லரசு நாடுகள் மற்றும் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சாலை பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பாக இருக்கின்றன. அதைபோன்றே மற்ற நாடுகளிலும் சாலை பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என  உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
 
மேலும் சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 1.35 மில்லியன் மக்கள் விபத்தில் மரணமடைவதாகவும், இனி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments