Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பிக்கு கொரோனா! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (09:17 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பிரச்சாரத்தில் இருந்த திமுக எம்.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சார பணிகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக எம்.பி பார்த்திபனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments