Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபேக் உளவாளிகள் என்னை ஃபாலோ பண்றாங்க! – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (09:07 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐபேக் ஆட்கள் தன்னை பின் தொடர்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “எதையும் வெளிப்படையாக பேச முடியாத நிலை உருவாகியுள்ளது. வீட்டிலோ, வெளியிலோ எதையும் பேசமுடிவதில்லை. ஐபேக் என ஒன்று இருக்கிறது. அவர்கள் எனக்கு பின்னாலேயே கேமராவோடு சுற்றி வருகிறார்கள். 5 நிமிடத்தில் வீடியோ எடுத்து போட்டு விடுவார்கள்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஆர்.பி.உதயகுமார் அங்கு அவரை காண வந்த தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை குறிப்பிட்டுதான் அமைச்சர் அவ்வாறு பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments