Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (18:33 IST)
இலங்கையின் யாழ்பாணத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


 
 
யாழ்ப்பாணம் புங்குடு தீவைச் சேர்ந்த பள்ளி மாணவி வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பிய போது அவரை கும்பல் ஒன்று கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது.
 
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை அந்த நாட்டு காவல் துறையினர் கைது செய்து அதில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மீதமுள்ள 4 பேர் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாணவியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த முக்கிய குற்றவாளி சுவிஸ் குமார் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்