Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கியூப புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்!

கியூப புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்!
, சனி, 26 நவம்பர் 2016 (11:24 IST)
கியூபாவின் முன்னாள் அதிபரும், கியூப கம்யூனிச புரட்சியின் நாயகனுமான ஃபிடல் காஸ்ட்ரோ இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.


 

1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.

பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.

அதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.

மேலும் படிக்க: பிடல் காஸ்ட்ரோ - புரட்சியின் இடி முழக்கம்
 
1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், காஸ்ட்ரோ பாடிஸ்டா அரசால் கைது செய்யப்பட்டார். அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.

”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார்.

அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் கியூபாவின் அதிபராக பதவி வகித்தார். பின்னர், 2008 ஆம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ இன்று அதிகாலை மரணமடைந்தார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு?: அப்பல்லோவில் சிகிச்சை!