Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணெய் கிடங்கை தாக்கிய மின்னல்! 17 பேர் மாயம்! – க்யூபாவில் பரபரப்பு!

Cuba
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
க்யூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று மின்னல் தாக்கி தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்யூபா நாட்டின் மடான்சாஸ் பகுதியில் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென எண்ணெய் கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி!