Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியை விட கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்கள்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (19:41 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று குரேஷிய, இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குரேஷிய அணி
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை குரேஷிய மக்கள் பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு பார்த்து ரசித்தனர். அலுவலகங்களிலும் தொலைக்காட்சியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் போட்டி முடிவடைய ஒருசில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது குரேஷிய நாட்டின் தீயணைப்புக்குழுவினர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தீவிபத்து குறித்த தகவல் ஒன்று வந்தது. இதனையடுத்து உடனடியாக கால்பந்து போட்டியை விட கடமையே பெரியது என்று எண்ணி வீரர்கள் கிளம்பினர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ ஒன்று குரேஷியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும் கால்பந்து போட்டியை விட  கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments