Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியை விட கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்கள்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (19:41 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று குரேஷிய, இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குரேஷிய அணி
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை குரேஷிய மக்கள் பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு பார்த்து ரசித்தனர். அலுவலகங்களிலும் தொலைக்காட்சியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் போட்டி முடிவடைய ஒருசில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது குரேஷிய நாட்டின் தீயணைப்புக்குழுவினர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தீவிபத்து குறித்த தகவல் ஒன்று வந்தது. இதனையடுத்து உடனடியாக கால்பந்து போட்டியை விட கடமையே பெரியது என்று எண்ணி வீரர்கள் கிளம்பினர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ ஒன்று குரேஷியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும் கால்பந்து போட்டியை விட  கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments