பிரபல சாம்சங் நிறுவனத் தலைவர் லீ  ஜே யாங்க் அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
 			
 
 			
					
			        							
								
																	உலக அளவில் மின்னணுத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக சாம்சங் உள்ளது. இந்நிறுவனத்தின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் இந்நிறுவத்தின் தலைவர் லீ காலமானார். இதையடுத்து லீயின் மகன்  லீ ஜே யோங்க் இந்நிறுவத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார்.
இவர் மீது லஞ்சம் மற்றும் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் சீயோல் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்த சியோல் நீதிமன்ற நீதிபதி லீ ஜேக்கு (52) 2 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாம்சங்க் நிறுவனத் தலைவர் லீ  தற்போது பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் ட் அந்ந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் அந்நாட்டு அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.