Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரியா சென்ற கொரோனா! – அதிர்ச்சியில் அண்டை நாடுகள்!

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (08:49 IST)
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தென்கொரியாவில் கொரோனா பலி அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. வேகமாக பரவும் இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 442 பேர் பலியாகியுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பலி அதிகரிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் கொரோனா வைரஸால் 7 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்கொரிய அரசு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து கொரியாவிலும் கொரோனா பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments