Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு பக்க விளைவுகள்! – சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:18 IST)
சீனாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். ஆரம்பத்தில் சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவினாலும் பிறகு மெல்ல கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கியது. எனினும் அங்கு மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மக்கள் பலருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் நடத்திய சோதனையில் 90 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் சுவாச பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிக்காத ஒருவரின் சுவாச தன்மையை விட, கொரோனா பாதித்து குணமான ஒருவரின் சுவாச தன்மை மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களை நடக்க செய்து சோதனை செய்ததில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களால் 6 நிமிடத்தில் 400 மீட்டர் நடப்பதே சிரமமாக இருந்தது என்றும், சாதாரணமான மனிதர்கள் 6 நிமிடத்தில் 500 மீட்டரை எளிதில் கடந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments