Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8,000 தொட்ட எண்ணிக்கை; தொடரும் கொரோனாவின் மனித வேட்டை!!

8,000 தொட்ட எண்ணிக்கை; தொடரும் கொரோனாவின் மனித வேட்டை!!
, புதன், 18 மார்ச் 2020 (08:28 IST)
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 345 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலி மட்டுமின்றி ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனாவுக்கு மாருந்து கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்றாலும் அதை விட தீவிரமாக தொற்று பரவுவதோடு உயிரையும் கொல்வது சோகத்தை ஏற்படுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் 40 பேருக்கு கொரோனா: வதந்தி பரப்பிய மர்ம நபர் தலைமறைவு