Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – கலக்கத்தில் உலக நாடுகள்?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (08:17 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளை பாதித்தது. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டு காலமாக உலக நாடுகள் கொரோனா வைரஸோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக பல நாடுகளில் கொரோனா வெகுவாக குறைந்துள்ளதால் மக்கள் மாஸ்க்குகளை மறந்து நிம்மதியாக பொதுவெளிகளில் நடமாடி வருகின்றனர்.

சீனாவிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில நாட்கள் முன்னதாக 11 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 14,878 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments