Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் வரலாறு காணாத மழை – 47 பலி…. லட்சக்கணக்கானோர் பாதிப்பு !

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (13:12 IST)
ஈரானில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இதுவரையில் 47 பேர் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த 10 நாட்களாக கடுமையாக மழை பெய்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொடர் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,  ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments