Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் வரலாறு காணாத மழை – 47 பலி…. லட்சக்கணக்கானோர் பாதிப்பு !

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (13:12 IST)
ஈரானில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இதுவரையில் 47 பேர் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த 10 நாட்களாக கடுமையாக மழை பெய்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொடர் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,  ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments