Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி கடித்ததால் திரும்ப எலியை கடித்த கல்லூரி மாணவி.. மருத்துவமனையில் அனுமதி..!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (15:30 IST)
கல்லூரி மாணவி ஒருவரை எலி கடித்த நிலையில் ஆத்திரத்தில் எலியை அந்த மாணவி திரும்ப கடித்ததால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வினோத சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை எலி கடித்துவிட்டது. இதனை அடுத்து அந்த எலியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விரட்டி விரட்டி அந்த எலியை பிடித்து அதனை திரும்ப தனது பற்களால் கடித்துள்ளார். இதனால் எலி உயிரிழந்தது. 
 
ஆனால் எலியை கடித்ததால் அவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது அவரிடம் இது போல் இனிமேல் செய்ய வேண்டாம் என்றும் இவரைப்போல் வேறு யாரும் செய்ய வேண்டாம் என்றும் அவரது கல்லூரி தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments