Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்த சென்னை இளைஞர்: போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

cellphone
, சனி, 23 டிசம்பர் 2023 (07:31 IST)
சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது அவரது பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு கீழ் தளத்தில் தான் வசித்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கீழ் வீட்டில் உள்ள ஒருவரே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த 30,000 கோடி எங்கே? பதிலடி கொடுத்த அண்ணாமலை..!