Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோகோ கோலா நிறுவனத்தின் முதல் மதுபானம்! இளம்பெண்களை குறிவைக்கின்றதா?

Webdunia
திங்கள், 28 மே 2018 (16:48 IST)
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்பான தயாரிப்பில் உலகின் முன்னனி இடத்தில் உள்ள கோகோ கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மதுபானம் படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
 
3%, 5% மற்றும் 7% ஆல்கஹால் உடன் மூன்று விதமான பானங்களை அறிமுகம் கோகோ கோலா நிறுவனம் செய்துள்ளது. இந்த மதுபானத்தில் எலுமிச்சை சுவை உள்ளதால் இதனை இளம்பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
 
ஜப்பானில் 350 மிலி கொண்ட மதுபான பாட்டில் 150 யென் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.93 என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவில் கோகோ கோலா நிறுவனத்தின் குளிர்பான தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த மதுபானம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் எதிர்ப்புகள் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments