வாயிலேயே குத்துவார்கள்: ஈரான் ராணுவ கமாண்டோ காட்டம்!

Webdunia
புதன், 23 மே 2018 (12:04 IST)
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகியது. இதனையடுத்து வரலாறு காணாத பொருளாதார தடைகள் ஈரான் மீது விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அரசுத்துறை செயலர் பதவி என்பது நாடுகளின் அயலுறவு அமைச்சருக்கு இணையானது. இந்த பதவியில் இருக்கும் மைக் பாம்ப்பியோ ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரித்தது. 
 
அவர் கூறியதாவது, ஈரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே வரவில்லையெனில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கும் என்று எச்சரித்தார்.
 
இதனையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர், ஈரான் மக்கள் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். அமெரிக்க செயலர் பாம்ப்பியோவின் வாயிலேயே குத்த வேண்டும். அவரை ஆதரிப்பவர்கள் வாயிலும் குத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
மேலும், வரலாற்றை உற்று நோக்கினால் ஹிரோஷிமா, நாகசாகியை அணுகுண்டு வீசி தாக்கிய அமெரிக்காதான் உலகின் நம்பர் 1 கிரிமினல் என்றும் காட்டமாக அமெரிக்காவை தாக்கி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments