துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 15 வயது பள்ளி மாணவி.. 3 பேர் பரிதாப பலி..!

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:56 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கி நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், சம்பவ இடத்தை கேள்விப்பட்டு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுமார் 390 மாணவர்கள் படித்து வரும் நிலையில், துப்பாக்கி சூட்டில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments