Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீஸ்வரரான சீன விவசாயி

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (14:45 IST)
சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
 
சீனாவில் 51 வயது விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தை உழுதார். அப்போது வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது. அடர்த்தியான ரோமங்கள் நிறைந்த அந்த கல் 4 இன்ச் நீளமும், 2.5 இன்ச் அகலமும் இருந்தது. அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் கேட்டபோது அது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என தெரியவந்தது.
 
‘கோரோசனை’ என்று அழைப்படும் அந்த பன்றியின் பித்தப்பை கல் பலவிதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாகும். விவசாயிடம் கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பை கல் ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் கோடீஸ்வரரான விவசாயி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments