Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை பகைச்சிக்கிட்டா அது உங்களுக்கும்தான் நஷ்டம்! – சீனா எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (08:17 IST)
சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. மேலும் மேம்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து சீன நிறுவனங்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வீடோங் “சீனாவுடனான உறவுகளை துண்டிப்பதனால் இந்தியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவொருக்கொருவர் இன்றி நம்மால் வாழ முடியாது என்ற கட்டமைப்பு இன்னமும் உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் கல்வான் எல்லைப்பகுதியில் சீன ராணுவங்கள் நுழைந்திருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்த அவர் கல்வானில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழையவில்லை என கூறியுள்ளார்.

சீனா முழுமையாக படைகளை திரும்ப பெற்று இந்தியாவுடன் நேர்மையாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம் என்று இந்திய செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments