Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நீளமான கண்ணாடி பாலம்: சீனாவில் இந்த வாரம் திறப்பு

உலகின் நீளமான கண்ணாடி பாலம்: சீனாவில் இந்த வாரம் திறப்பு

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:36 IST)
சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது. இந்த வாரத்தில் பாலம் பொதுமக்கள் நடந்து செல்ல திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு ஒரு நாள் முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும்.

சமீபத்தில் இந்த பாலத்தில் 2 டன் எடை கொண்ட மின் லாரி ஒன்றை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அவ்வளவு எடையையும் அந்த பாலம் தாங்கியது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments