Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவெல்லாம் போச்சு! ஜாலி டூர் கிளம்பிய சீனர்கள்!

Webdunia
சனி, 2 மே 2020 (12:34 IST)
சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதை தொடர்ந்து சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. உலக நாடுகள் பல கொரோனா நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் தற்போது சீனாவில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

நேற்று உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி சீனாவில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக சீன மக்கள் பலர் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து 70 சதவீத சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முன்னெச்சரிக்கை சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாகவும், மாஸ்க் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments