Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதங்களை இரு மடங்காக்க சீனா திட்டம்! – அமெரிக்கா எச்சரிக்கை!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:49 IST)
சீனா – அமெரிக்கா இடையே சில காலமாக மோதல் எழுந்துள்ள நிலையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார ரீதியான மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில் கொரோனா விவகாரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில் சீனாவின் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் புகுந்தது நிலைமையை இன்னும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, தைவானுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு போன்றவற்றால் சீனாவுக்கு உலக நாடுகளிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இரு மடங்காக அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் போருக்கு வித்திடுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறை: டெல்லியில் பரபரப்பு

ஊழியர்களைத் தக்கவைக்க OpenAI-இன் புதிய வியூகம்: கோடிக்கணக்கில் போனஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments