Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியே தடை பண்ணுனா என்னங்க அர்த்தம்? – இந்தியாவின் தடையால் கடுப்பான சீனா!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (15:53 IST)
இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அலிபாபா நிறுவன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் சீன – இந்திய துருப்புகளிடையே ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து சீன செயலிகளை இந்தியா தடை செய்து வருகிறது.

முன்னதாக ஜூன் மாதத்தில் 59 செயலிகளும், செப்டம்பர் மாதம் 118 செயலிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 43 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதில் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் செயலிகளும் அடக்கம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயலிகளை தடை செய்துள்ளதாக இந்தியா விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகளில் மேலும் இடைவெளி ஏற்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments