Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாக பிளந்த சீன அடுக்குமாடி கட்டிடம். 5 பேர் பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (23:19 IST)
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மங்கோலிய பிரிவில் அமைந்துள்ள நகரம் படுவா என்ற நகரம். இந்த நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டிடமே இரண்டாக் பிளந்தது போன்று காட்சி அளிக்கின்றது.




 

இந்த வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்ததால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாட்டுகளில் சிக்கியவர்களை வெளிக் கொண்டு வர போராடினர்.

இதுவரை 5 பேர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இடிபாடுகளில் பிணம் இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. குடியிருப்புக்கு சென்ற இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட லீக்கே இந்த வெடிவிபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments