Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டனர்? வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (16:26 IST)
தாய்லாந்து தாம் லூங் குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.   
 
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுங் என்ற 10 கிமீ நீள குகை உள்ளது. கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியை சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகச பயணம் சென்றனர். இந்த சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார். 
 
இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இவர்களை மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 
 
இந்நிலையில் சிறுவர்களை வீரர்கள் மீட்ட வீடியோவை தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ உங்களுக்காக...
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments