Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடுபோன விஞ்ஞானி டார்வினின் நோட்டுகள்! – திரும்ப கொடுத்த மர்ம திருடன்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:38 IST)
பிரபல விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நோட்டுகளை திருடிய நபர் அதை திரும்ப கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலகிற்கு சொன்னவர் விஞ்ஞானி சார்லஸ் டார்வின். அவர் கைப்பட எழுதிய இரண்டு நோட்டு புத்தகங்கள் அவர் படித்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. கடந்த 2000ம் ஆண்டு மர்ம ஆசாமி ஒருவரால் இந்த நோட்டு புத்தகங்கள் திருடப்பட்டது.

22 ஆண்டுகள் ஆகியும் திருடியவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு டார்வினின் நோட்டு புத்தகத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டி உலகளாவிய வேண்டுகோளை பலரும் முன்வைத்தனர். இந்நிலையில் டார்வினின் நோட்டு புத்தகங்களை கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக வாயிலில் போட்டு விட்டு சென்ற அந்த மர்ம நபர் ஈஸ்டர் வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் ஒன்றை வைத்துள்ளார். பல பவுண்ட் மதிப்புள்ள டார்வினின் நோட்டுகள் திரும்ப கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments