Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூலப்பொருட்கள் கடும் விலையேற்றம்! – தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:26 IST)
தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோலிய விலை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து, வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல்வேறு பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. சாத்தூரில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

இதனால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், மூலப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் 11 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் சாத்தூர் உள்பட தமிழகத்தில் செயல்படும் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments