Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்த பேச்சுவார்த்தை! சம்மதம் சொன்ன ரஷ்யா - உக்ரைன்! - அமெரிக்காவின் அடுத்த மூவ்??

Prasanth Karthick
வியாழன், 20 மார்ச் 2025 (09:43 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்றாடுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை நிறுத்த மேற்கொண்ட பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போரை முடித்து வைக்க தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அமெரிக்கா தொடர்ந்து இரு நாடுகளிடையே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

 

அவ்வாறாக தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தற்போது இரு நாடுகளும் 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தி படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளில் புதிய உடன்படிக்கையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments