Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''போர் நிறுத்தம் என்பது புதினின் தந்திரம்''- உக்ரைன் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:37 IST)
கடந்தாண்டு பிப்ரவரி  மாதம் 20 ஆம் தேதி ரஷிய அதிபர் தங்கள்  நாட்டு ராணுவத்தை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இப்போர் தொடங்கி ஒரு ஆண்டை நெருங்கியுள்ளது.

ஆனால், இப்போர் முடிந்த பாடில்லை. இரு நாட்டு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளனர். அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  கடந்த புத்தாண்டு தினத்திலும் கூட உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது.
 

ALSO READ: உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷிய படைகள்
 
உக்ரைனும், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவியுடன் ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது.

இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென மேற்கத்திய நாடுகளும் அரசியல் தலைவர்களும் கூறிவருகின்றனர்.

ஆனால், உக்ரைனில் ரஷியா தற்போது ஆக்ரமித்திருக்கும் பகுதிகளை ரஷியாவுக்குச் சொந்தமானது என ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் பிடிவாதமாக உள்ளார்.

''சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 36 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யவுள்ளதாக புதின் கூறியது திட்டமிட்ட தந்திரம். போர் நிறுத்தத்தின்போது, ரஷிய  படைகள் உக்ரைனை விட்டு  வெளியேறவில்லை'' என உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments