Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கள் மீது மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : பதறவைக்கும் சம்பவம் ! பரவலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (16:09 IST)
சீனா தேசத்தில் ஜியாங்கு மாகாணத்தில் சுக்சி என்ற நகர் உள்ளது. இங்குள்ள  மேம்பாலத்தில் நேற்று இரவு 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. அப்பொது மேம்பாலம் திடீரென விழுந்தது. இதில் 2 கார்கள் பலத்த சேதம் அடைந்தன.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் , அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள்  மற்றும் 3 கார்கள் கீழே விழுந்து சேதமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
இந்த பயங்கர விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த விபத்து குறித்து  ஜியாங்கு மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments