Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மகளை திருமணம் செய்தால் ரூ.1164 கோடி பரிசு; தொழிலதிபர் அறிவிப்பு

என் மகளை திருமணம் செய்தால் ரூ.1164 கோடி பரிசு; தொழிலதிபர் அறிவிப்பு
, செவ்வாய், 23 மே 2017 (17:38 IST)
மகளை திருமணம் செய்து கொண்டு வாழும் ஆணுக்கு ரூ.1164 கோடி பரிசாக வழங்கப்படும் என சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 

 
சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் செசில் சாவோ எனபவர் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் நினைத்ததை சாதிக்கும் வல்லமை கொண்டவர். ஆனால் அவரால் இதுவரை அவரது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.
 
அதன் காரணம் அவரது மகள் ஒரினசேர்க்கையாளர். இவரது மகளின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு 60மில்லியன் டாலர் வழங்கப்படும் என 2012 ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. அப்போது முதல் ஆண்டுக்கு ஆண்டு பரிசு மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 
 
தற்போது ரூ.1164 கோடி பரிசு வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மகள் ஒரினசேர்கையாளரக இருப்பதே எனது விருப்பம் என தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். சாவோ, என்றாவது தனது மகளின் மனம் மாறும் காத்து இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென மாயமான இந்திய போர் விமானம்