Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!

organs
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:53 IST)
திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
சென்னையை அடுத்த திருப்போரூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துக் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார் 
 
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் படுகாயம் அடைந்தார் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்டது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் தங்கள் மகனை இழந்த போதிலும் அவரின் பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல் தற்போது வைரலாகி வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மணி நேர சோதனை முடிந்தது: என்ன கிடைத்தது எஸ்பி வேலுமணி வீட்டில்?