Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளிகளை நகையாக அணிந்த மணப்பெண்.. வைரல் புகைப்படம்

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (13:01 IST)
பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை திருமணத்திற்கு அணிந்துள்ளார்.

பாகிஸ்தானில் தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தக்காளி விலை அதிகமாகி வருகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் மதிப்பு 300 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் ஆன நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்துள்ளார்.

அதன் புகைப்படத்தை நைலா இணையட் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த மணப்பெண்ணிற்கு அக்குடும்பத்தினர் 3 கூடை தக்காளி சீதனமாக வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மணப்பெண், உள்ளூர் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில், “தங்கம் விலை உயர்ந்தது, அதற்கு ஈடாக தக்காளிகளும் விலை உயர்ந்துள்ளது. அதனால் தான் நான் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்துள்ளேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments