Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிற்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ்? ஆய்வில்அதிர்ச்சித் தகவல்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (07:12 IST)
சீனாவிற்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ்?
கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனா தான் என்றும் எனவே தான் இந்த வைரஸை அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகள் சீனா வைரஸ் என்றும் அழைத்து வருகின்றன. சீனாவில் வூகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று சீனாவுக்கு முன்னரே பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் எடுத்த கழிவுநீர் ஒன்றினை ஆய்வு செய்தபோது அதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் தான் பிரேசில் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும், ஆனால் டிசம்பர் மாதம் முதலே சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் பிரேசில் ஆய்வாளரின் இந்த ஆய்வை பிரேசில்  நாட்டின் மற்ற ஆய்வாளர்கள் ஏற்று கொள்ளவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. அவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா இல்லை என்றும், அது கொரோனா வைரஸாக இருந்திருந்தால் பிரேசிலில் அந்த வைரஸ் நவம்பர் மாதமே பரவியிருக்கும் என்றும், சீனாவில் இருந்து பிரேசிலுக்கு விமானம் மூலம் பயணிகள் பிப்ரவரி மாதம் வந்த பின்னரே பிரேசிலில் கொரோனா பரவியது என்றும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments