Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையிலிருந்து தப்ப தனது மகளை போல மாறிய கைதி..

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:31 IST)
பிரேசில் நாட்டில் சிறை கைதி ஒருவர், தனது மகளைப் போல வேடமிட்டு தப்ப முயன்றுள்ளார்.

பிரேசில் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிளாவினோ டா சில்வா, ஒரு கேங் லீடர் ஆவார். அவருக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் தனது தந்தையை பார்க்க வந்தபோது, தந்தை ஒரு திட்டம் தீட்டியிருப்பதை மகள் அறிந்திருக்கவில்லை.

தன்னை பார்க்க வந்த மகளை சிறையிலேயே விட்டுவிட்டு, திட்டமிட்டபடி தனது மகளைப் போலவே உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்துள்ளார். பின்பு மகளைப் போலவே வேடமணிந்து, மகளை சிறையிலேயே விட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் போலீஸார், சில்வாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்துள்ளது. முழுவதுமாக தனது மகளைப் போலவே மாறிய கைதியை போலீஸார் மடக்கி பிடித்தனர். மேலும் இதை விட அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments