Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த கட்சியிலேயே நெருக்கடி… பதவி விலகுகிறாரா போரிஸ் ஜான்சன்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:31 IST)
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு விருந்தில் கலந்துகொண்டது அவரது பதவிக்கே ஆபத்தாக வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 முதலாக பரவி வரும் நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. 2020ல் இங்கிலாந்திலும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்த சமயம் தனது அலுவலக கார்டனில் தேநீர் விருந்து நடத்தியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.  மேலும் அதை அவர் 7 மாதமாக மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்ததும் மிகப்பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ளது. இதை போரிஸ் ஜான்சனின் உதவியாளர் வெளியில் கசியவிட்டது இங்கிலாந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரே போரிஸ் ஜான்சனுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் பொதுமக்களிடையேயும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரின் மன்னிப்பை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் சொந்த கட்சியினர் கூட அவர் பதவி விலக வேண்டும் என நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை இழக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பிரதமர் பதவியை ஏற்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments