Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் - 235 பேர் பலி

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (13:08 IST)
எகிப்து நாட்டின் சினாய் பகுதில் உள்ள ஒரு மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 235 பேர் பரிதாபமாக பலியாகினர்.


 
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள அல் ராவ்தா மசூதிக்கு அருகே, நேற்று மாலை நான்கு தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர்.
 
இந்த கோர சம்பவத்தில் இதுவரை 235 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
மசூதிக்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
 
இந்த கோர சம்பவம் எகிப்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments