Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணையாத அமேசான் காட்டுத் தீ: திணறும் அரசாங்கம்!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (09:11 IST)
பொலிவியா நாட்டில் அமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு அரசாங்கம் திண்டாடி வருகிறது. 
 
உலகிற்கே 20% மழை கொடுக்கும் அமேசான் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவி லட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகியது. அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஈடுபட்டது. 
 
மேலும் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாக இருந்தது. 
இந்நிலையில், பொலிவியா நாட்டில் 3800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனத்தில் இன்னமும் தீ பற்றி எரிந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீ நாளுக்கு நாள் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிரது பொலிவியா அரசு. 
 
ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள அரசுக்கு, இந்த காட்டு தீ மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து உதவி பெற்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்தாலும், பிற நாடுகளிடம் இருந்து உதவியை கோரியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments