Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படகு கவிழ்ந்து விபத்து...59 அகதிகள் பலி...104 பேர் மீட்பு

Advertiesment
Boat
, புதன், 14 ஜூன் 2023 (22:10 IST)
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்தில்  59 அகதிகள் பலியானதாகவும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து பலத்த காற்று வீசியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து ராணுவ விமானம் ,ஹெலிகாப்டர் மற்றும்  படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் பலியாகினர். மேலும்,104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கடலோர காவல் படையினர் கூறியதாவது: லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி இவர்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாமக திட்டமிட்டு வன்னியர் சமூக இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது- . திருமாவளவன்