Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியின் காலில் செருப்பை மாட்டிவிட்ட பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (10:55 IST)
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்த நாள் சமீபத்தில் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர் என்ற இடத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
 
இந்த விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் சமூக தொண்டுகள் செய்த தலித் பெண்கள் ஒருசிலர் மேடைக்கு வரவழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ரட்னிபாய் என்ற முதிய பெண் மேடையில் ஏறி வந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது செருப்பு நழுவியது. இதனைப்பார்த்த பிரதமர் மோடி, உடனே அவரை கைத்தாங்கலாக பிடித்து நழுவிய செருப்பை கையில் எடுத்து அந்த மூதாட்டியின் காலின் அணிய உதவினார். பிரதமரின் இந்த நெகிழ்ச்சியான உதவி அனைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களுடன் வெளிவந்து வைரலாகியுள்ளது. 
 
இந்த விழாவில் 'அயூஷ்மான் பாரத்' என்ற சுகாதார பாதுகாப்பு திட்த்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி கூறியதாவது: நான் இந்த பகுதி வளர்ச்சிக்காக தற்போது வருகை தந்துள்ளேன். விவசாயிகளின் நலன் ஒன்றே எங்கள் உயிர் மூச்சு. விவசாயிகளின் முன்னேறத்திற்காக எங்கள் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது போல் பொதுமக்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறோம். அம்பேத்கர் கனவை நிறைவேற்றவும், அவரது எண்ணங்களை செயல்படுத்தவும் நாங்கள் உழைக்கிறோம்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments