Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியாழனிலிருந்து வெளிப்பட்ட திடீர் ஒளி?? – விஞ்ஞானிகள் ஆய்வு!

வியாழனிலிருந்து வெளிப்பட்ட திடீர் ஒளி?? – விஞ்ஞானிகள் ஆய்வு!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (10:07 IST)
சூரிய மண்டலத்தின் பெரிய கோளான வியாழனில் ஏற்பட்ட திடீர் ஒளி குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பெரிய கோளாக உள்ளது வியாழன். பூமிக்கும் அருகில் உள்ள கோள்களில் ஒன்றான வியாழன், பூமியை விட பல மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை கொண்டது மற்றுமன்றி பல துணை நிலவுகளை கொண்டது. வியாழனுக்கு உள்ள அதிகமான ஈர்ப்பு விசையால் விற்கற்கள் திரள் பல அதை சுற்றி அமைவதால் அது பூமியையும் பாதுகாக்கிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 15 அன்று ஜப்பானின் கியோட்டோ விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தில் பெரும் ஒளிப்பிழம்பு ஏற்பட்டத்தை கண்டறிந்து பகிர்ந்துள்ளார்கள். இந்த தகவலை பிரெஞ்சு விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈர்ப்பு விசையால் விண்கற்கள் வியாழனில் மோதியதால் அந்த ஒளி ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றுடன் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள்..! – இந்தியா படைக்கும் புதிய சாதனை!