பட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

Webdunia
திங்கள், 21 மே 2018 (14:05 IST)
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது தொடர்ந்து கொண்டே வருகிறது.

 
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட 80க்கும் மேற்பட்ட பல ஹாலிவுட் நடிகைகள் ஏற்கனவே பாலியல் புகார்களை கூறியுள்ளனர்.  வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் முதல், பிரபலமான நடிகைகள் பலரும் இவரின் பாலியல் இச்சைக்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டோவும் ஹார்வி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். சமீபத்தில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 
இதே கேன்ஸ் நகரில் 1997ம் ஆண்டும் ஹார்வி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழாவில்தான் அவர் நடிகைகளை தேடிப்பிடித்து கை வைப்பார். ஹோட்டலில் தங்கியிருந்த என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அடுத்த 5 வருடம் அவர் கூறிய படியே நடக்க வேண்டியதாயிற்று. என் சினிமா வாழ்க்கையை அவர் சீரழித்து விடுவார் என பயந்தேன். ஆனால், தற்போது அவரை பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேல் அவரால் இந்த விழாவிற்கு வர முடியாது” என கொட்டித் தீர்த்தார்.
 
இவரின் புகாரை வழக்கம் போல் ஹார்வி தரப்பு மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்