Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலாக்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்து- 10 பேர் பலி

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:11 IST)
மத்திய பிரதேசம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து அகமதாபாத்துக்கு தனியார் பேருந்தின் மூலம் பலர் சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து மத்திய பிரேதசம் மாநிலம் குணா மாவட்டத்திற்கு வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விழிப்புணர்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments