தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம்… அர்ஜுன் சம்பத் ஆவேசம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:32 IST)
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விநாயகர் சதுர்த்தி கண்டிப்பாக கொண்டாடுவோம் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவும் அடங்கும். ஆம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்வ கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் ‘10 ஆம் தேதி தடையை மீறி ஊர்வலம் செல்வோம். டாஸ்மார்க் கடையில் கூட்டம் கூடினால் கொரோனா வரவில்லையா? கோயிலில் செய்யும் யாகங்களால் கொரோனா ஓடிவிடும்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments