Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 வருஷத்துல பனிப்பாறைகளே இல்லாம போயிடும்! – ஆபத்தான நிலையில் ஆர்க்டிக்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (13:23 IST)
உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஆர்க்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலகின் பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்து ஒருசில நாடுகள் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தொடங்கியுள்ள போதிலும் பரவலாக இதுகுறித்த புரிதல் மக்களிடம் ஏற்படாமல் உள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் உருகி வரும் ஆர்க்டிக் பனிப்பாறைகளின் உறையும் வீதம் குறைந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டுதோறும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் கோடைக்காலங்களில் உருகுகின்றன. பின்னர் குளிர்காலங்களில் மீண்டும் தண்ணீர் உருகி பனிப்பாறையாக மாறுகின்றன.

ஆனால் சமீப காலமாக பனிப்பாறைகள் உறைவதை விட உருகுவது அதிகமாகி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள மொத்த பனிப்பாறைகளும் உறுகி விடும் என்றும், 2050ல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகளே இருக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கடல்நீர் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments