Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் தாக்குதல் - அமெரிக்க ராணுவ வீரர் தீக்குளிப்பு!

Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (16:24 IST)
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க வீரர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் நாட்டின்  மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் ஆண்டு  ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து,  ராணுவவீரர்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.
 
அதன்பின்னர், 240 பேரை பிணைக் கைதிகளாக காஸா முனைக்கு கொண்டு வந்தனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாடு ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியும் காஸா மீது உக்கிரமுடன் தாக்குதலை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், காஸா முனையில்  டேர் அல் பலாஹ் நகரின் ஜவைதா பகுதியில் உள்ள அகதிகள் முகாமைக் குறிவைத்து, இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க வீரர் தீக்குளித்தார். இந்த  சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இறந்த அமெரிக்க ராணுவ வீரர்  ஆரோன் புஸ்னெல்(25)-க்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments