Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.விக்குத் தீர்வு வந்தாச்சு!!!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (18:01 IST)
அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.விக்கு மருந்து கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ரஸ்கா பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், எலிகளின் உடலில் இருந்து எச்.ஐ.வியை நீக்கியுள்ளனர்.

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதனுள் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு, எலியின் ஜீன்களில் இருந்து எய்ட்ஸ் கிருமி முற்றிலுமாக நீங்கியுள்ளது.

எச்.ஐ.வி, நோய்க்கான தீர்வு கிடைப்பதில், இது முதல் வெற்றி என நெப்ரஸ்கா பல்கலைகழத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் அடுத்தகட்ட சோதனைகள் தற்போது நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளில், எய்டஸ் நோயை போக்ககூடிய மருந்துகள் இது வரை கண்டுபிடிக்கப்படாமல், பல எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பலகலைகழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வெற்றி அடைந்திருக்கும் வகையில், இந்த செய்தி எய்ட்ஸ் நோயாளிகளின் நம்பிக்கை கீற்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments